அரிய வகை மரங்கள் சேதம்
மேற்கு தொடர்ச்சி மலையில் 2 இடங்களில் 300கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்த காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
- அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் எரிந்து சேதம்
- காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை
கோடை காலம் துவங்கும் முன்பு இருந்து பற்றி எரிய தொடங்கிய காட்டுதியானது தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் நாள்தோறும் தீ பற்றி எரிந்து வருவதால் வனவிலங்குகள் விவசாய விளைநிலங்களில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சின்னூர், பெரியூர் மலை கிராமத்திற்கு மேல் தேவைதானப்பட்டி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று மாலை முதல் காட்டு தீ பற்றி எரியத் துவங்கிய நிலையில் தீ பரவி 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரவியது.
காட்டுத் தீ
இதேபோல் தேனி வனச்சராக எல்கைக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணைக்கு மேல் அகமலை வனப்பகுதியில் ஊரடி ஊத்துக்காடு கிராமத்தின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.