சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி

சீனாவில் 24 மணி நேரத்தில் இரண்டு தனித்தனி நிலக்கரி சுரங்க விபத்துகளில் 12 பேர் பலியாகியுள்ளனர். ஷாங்சி மாகாணத்தின் சோங்யாங் கவுண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி பதுங்கு குழி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை மீட்புபடையினர் தேடிவருகின்றனர்.

தொடர்ந்து சீனாவின் கிழக்கு அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்ஹே எனர்ஜியின் நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. 

Leave a Reply

Your email address will not be published.