தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தானியங்கி தண்ணீர் வழங்கும் மையங்களில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த தானியங்கி மையங்களில் 5 ரூபாய் நாணயம் செலுத்தி, தண்ணீரை பிடித்துச் செல்லலாம்.
ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக காலை மற்றும் மாலையில் மட்டுமே தண்ணீர் விற்கப்படுகிறது.
இந்நிலையில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.