சென்னை மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கோடை காலம் வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே வரமுடியாது, வெயிலின் தாக்கம் வெகுவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வேறு எச்சரித்துள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ளதாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்தும் என்பது இப்போதே உறுதியாகிவிட்டது.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக இரவுகளில் நிலவி வந்த குளிர் படிப்படியாக குறைந்து விட்டது. இப்போது வீடுகளுக்குள் வெப்பம் தகிக்க தொடங்கிவிட்டது. இந்த வெக்கையான நாட்களில் இருந்து விடுதலை தருவதாக அமைவது ஏசிக்கள் தான். வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக குளு குளுவென நம் வீட்டை வைப்பதற்கு கோடை காலங்களில் ஏசி பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் பலரும் ஏசி அறைகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.