விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்

இச்சூழலில் இவரின் தயாரிப்பில் உருவாகி வரும் அமீரின் `இறைவன் மிகப்பெரியவன்’ வெளியீட்டிற்குத் தயாராக இருந்த மங்கை உள்ளிட்ட படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து அமீர், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை; இது குறித்து ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். சட்ட விரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிலர், அமீரும் ஜாபரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், அமீர் ஆரம்பித்திருக்கும் உணவகத்தையும் குறிப்பிட்டு `இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். ஜாபர் பற்றி அமீருக்கு எப்படி தெரியாமல் இருக்கும்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.