ஈழத்து சீரடி சாயி மந்திர் பாடல்கள்..
இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழத்து சீரடி சாயி மந்திர் திருக்கோவிலுக்கு,
சாய்பாபாவின் அருளினால் 4 பாடல்கள் மிகவும் சிறப்பாக படைத்துள்ளனர்.
ஈழத்து சீரடி சாயி மந்திர் திருக்கோயில் நிறுவனர் ராகவ் அவர்கள் தயாரிக்கின்றார்.
இந்த பாடல்கள் அனைத்தையும், திரைப்பட இயக்குநர் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் எழுதி இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் அமைந்துள்ள சாய்பாபாவின் அருமை பெருமைகளை போற்றி அந்தப் பின்னணியில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.
இப்பாடல்களை உலகப் புகழ் பெற்ற பாடகர் சி. என்.எஸ் மற்றும் ரமேஷ், குமரேசன்,சுதா குழுவினர் ஆகியோர் பாடியுள்ளனர்
அந்தப் பாடல் வரிகள் பின்வருமாறு:
- ஈழத்து சீரடி சாயி மந்திர்…
. ஈழத்து சீரடி சாயி மந்திர்…
ஈழ மண்ணில் அருள் புரிந்தாய்…..
2 .யாரும் அறிவார்…. யாவரும் அறிவார்… யாழ்முகம் சாய்நாதா எங்கள் யாழ் முகம்
சாய்நாதா…..
3. மானிடம் பாபா.. வந்தாயே பாபா.. கருணையும் பாபா.. அருளும் பாபா…
4. ஈழம் நாதரே….
ஈழம் நாதரே..
ஈழத்து சீரடி சாய்நாதரே
எங்கள் ஈழத்து சீரடி சாய்நாதரே…
என 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
விரைவில் இப்பாடல்களை ஈழத்து சீரடி சாயி மந்திர் திருக்கோயிலில்,
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வெளியிடுகின்றனர்.
செய்தி கோவை பாலசுப்பிரமணியன்.