ரூ.2,149 கோடி மதிப்பிலான பணிகள்

ஒடிசாவின் மேற்கே பார்கார் மாவட்டத்தின் கானபாலி நகருக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று சென்றார். அவர் ரூ.2,149 கோடி மதிப்பிலான 62 திட்ட பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார்.
இதேபோன்று மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசனம் பெறும் வகையில், கங்காதர் மெஹர் நீர்ப்பாசன திட்டம் ஆனது ரூ.1,676.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது.
விவசாயிகள், மிஷன் சக்தி பெண் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா திட்டம் மாநிலத்தின் 4 கோடி மக்களுக்கு ஆசீர்வாதம் ஆக உள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் லட்சுமி பஸ் திட்டம் உள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுஉள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.