சிலம்பம், கராத்தே, வீர விளையாட்டு..

இன்று மாலை சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிலம்பம் கராத்தே போன்ற வீர விளையாட்டுகள் TANGSUDOO அகடமி சார்பாக கலந்து கொண்ட வெற்றி பெற்ற வீரர்களுக்கு அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் நிறுவனத் தலைவர் சமூக சேவைகி திருமதி லட்சுமி ஜெயக்குமார் அவர்களும்

இந்த அமைப்பை சார்ந்த பொதுச் செயலாளர்
லைன் பி வெங்கடேசன் அவர்களும் மாநில செயலாளர் டாக்டர் ராஜ்குமார் அவர்களும்

இந்த அமைப்பின் மாநில ,மாவட்ட நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் அணிவித்து அவர்களை வாழ்த்தி அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் நிறுவனத் தலைவர் திருமதி லட்சுமி ஜெயக்குமார் எழுச்சி உரையாற்றினார்

பொதுச் செயலாளர் LION P.வெங்கடேசன்,M.A., அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தைகளை வாழ்த்தி எதிர்கால சமுதாயத்திற்கு அவருடைய கடமை, பொறுப்பு எவ்வாறு அமைய வேண்டும் அவர்கள் சமூக நலனில் எப்படி அக்கறை கொள்ள வேண்டும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கும் மதிப்புமிக்க மாணவர்களாக எதிர்கால தலைவராக அனைத்து துறைகளும் எவ்வாறு சிறந்த விளங்க வேண்டும் என்று தன்னுடைய சிறப்புரையை குழந்தைகளுக்கா ஊக்குவிக்கும் நோக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தார்

இந்த நிகழ்வில் அந்த பகுதியில் உள்ள பெரியோர்கள் பெற்றோர்கள் வணிகப் பெருமக்கள் ஆசிரியர் பெருமக்கள் பெரும்திரலாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள்

இறுதியாக அனைவரின் சார்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த
திரு ராஜாராம்,M.com,M.A.
P.ED ,PGDK அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.