தங்கம் வாங்கி குவிக்கும் மத்திய தர வர்க்கத்தினர்!

மும்பை: இந்தியாவை பொறுத்தவரை, அதிக அளவில் தங்கம் வாங்கி குவிப்பது, மத்திய தர வர்க்கத்தினர் தான் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

‘இந்தியா கோல்டு பாலிசி சென்டர்’ நிறுவனம், கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டு வழங்கிய அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் மத்திய தர வர்க்கத்தினர் தான் அதிகளவில் தங்கம் வாங்குகின்றனர். அதுவும், தங்கத்தை கட்டியாகவோ, ஆபரணமாகவோ தான் வாங்க விரும்புகின்றனர். உயர் வருவாய் கொண்ட பிரிவினர் மட்டுமே, தங்கத்தை டிஜிட்டல் அல்லது காகித வடிவில் வாங்க விரும்புகின்றனர். ஆனால், மக்களின் பொதுவான மனநிலை, தங்கம் என்பது பணக்காரர்களுக்கானது என்றே இருக்கிறது. யதார்த்தத்தில், மத்திய தர வர்க்கத்தினரே அதிக அளவு தங்கம் வாங்குகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.