பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

பள்ளிகளுக்கு, நாளை மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு: வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு; 15ம் தேதி புனித வெள்ளி என, இரண்டு நாட்களுக்கும் அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விடுமுறை நாட்கள் முடிந்து, வரும் 18ம் தேதி பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, சனிக்கிழமையும் வேலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, தொடர் விடுமுறையால் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.