பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம் இதை மட்டும் செய்யுங்கள் .!

கடுமையான பல்வலியா? உடனடியா இதை செய்திடுங்கள்
பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு இது போன்ற பல காரணங்களினால் பல்வலி ஏற்படுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!
“”தேவையான பொருட்கள்””
கிராம்பு,தேங்காய், எண்ணெய்,உப்பு, மிளகு,தண்ணீர்,
“”செய்முறை””
முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.பயன்படுத்தும் முறைஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மார்பக புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம்”” ஆண்களே கவனம்..! மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம்..!! எப்படி அறிந்து கொள்வது..?
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.
பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர் .

Leave a Reply

Your email address will not be published.