நிர்ணயித்ததைவிட குறைந்த தொகைக்கு ஏலம்: புதுச்சேரிக்கு வருவாய் இழப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான கழிவறை, பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட்டுகளில் கட்டணம் வசூலிக்கும் குத்தகை ஏலம், நிர்ணயித்ததைவிட குறைவான தொகைக்கு விடப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், மார்க்கெட், கழிவறை, பைக் பார்க்கிங் பகுதிகளில் கட்டணம் வசூல் மற்றும் அடிக்காசு வசுல் செய்வதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், கடந்தாண்டு குத்தகை தொகையை விட 10 சதவீதம் கூடுதல் வைத்து ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 55 இனங்களுக்கான குத்தகை விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டது.

அதில், அண்ணா சாலை, நேரு வீதி, அரவிந்தர் ஆசிரமம் பகுதி, துாய்மா வீதி, ரோமண்ட் ரோலன்ட் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்காக குத்தகையும் இடம் பெற்றிருந்தது.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வரவே, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை ரத்து செய்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.