ஒசைரி நூல் கிலோ ரூ.30 உயர்வு: பின்னலாடை துறை அதிர்ச்சி!!

திருப்பூர்:பின்னலாடை தயாரிப்புக்கு பிரதான மூலப்பொருளான ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு 30 ரூபாய் நேற்று உயர்ந்தது.

பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த பிப்., மாதம் 78 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, தற்போது, 93 ஆயிரத்து 500 ரூபாயை எட்டியுள்ளது.
தமிழக நுாற்பாலைகள், இம்மாதத்துக்கான நுால் விலையை நேற்று வெளியிட்டன. பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அனைத்து ரக ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.