அரசு இசைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!!

கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து ‘இப்படி நடனமாட வேண்டும்’ என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.’ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்’ என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து ‘இப்படி நடனமாட வேண்டும்’ என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.’ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்’ என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.