ஸ்டாலின் துபாய் பயணத்தை உளவு பார்த்த டில்லி!!!

முதல்வர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பயணத்தில், ஆறு நிறுவனங்கள், 6,100 ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின்னணியில், முதல்வரின் மருமகன் சபரீசன் முக்கிய பங்காற்றி உள்ளார். இதை முன்னதாகவே மத்திய உளவுத் துறை அறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, முதல்வரின் பயணம் முழுவதையும், மத்திய உளவுத் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கண்காணித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.