போலீசாரை திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்குப்பதிவு!!

சென்னை: போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம், 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நிரஞ்சனா. அவரது கணவர் ஜெகதீசன். தி.மு.க., நிர்வாகி. இந்நிலையில், ஜெகதீசன், நேற்று முன்தினம் நள்ளிரவு, ராயபுரம், ஜே.பி.,கோவில் தெருவில், தன் ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை போலீசார் தியாகராஜன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர். அப்போது, ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், ‘ நான் தான் கவுன்சிலர்’ என ஜெகதீசன் விதண்டாவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

Leave a Reply

Your email address will not be published.