பாகிஸ்தானுடன் பேச்சு: காங்., விருப்பம்!!

லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க பாக்., தயாராக இருந்தது. அதிர்ஷ்டவசமாக பாக்., தாக்கவில்லை. அணு ஆயுத விவகாரத்தில், பாகிஸ்தானுடன் தகுந்த அமைப்புகள் மூலம் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.