ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.9,544.5 கோடி செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
