இந்தியாவில் மேலும் 1,233 பேருக்கு கோவிட்; 1,876 பேர் நலம்!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,233 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 1,876 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,23,215 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,876 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,87,410 ஆனது. தற்போது 14,704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.