ஆதரவை விலக்கிய கூட்டணி கட்சி; பெரும்பான்மையை இழந்தது இம்ரான் அரசு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடன் கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பார்லிமென்டில் மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, ஓட்டெடுப்பு ஏப்.,3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும். அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.