அமெரிக்க பெட்எக்ஸ் நிறுவன சிஇஓ மாற்றம்!!!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் பிரபல பெட்எக்ஸ் (பெடரல் எக்ஸ்பிரஸ் கார்ப்ரேஷன்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் முக்கிய நாடு மற்றும் நகரங்களுக்கு பார்சல் சர்வீஸ் சேவை, இ-வர்த்தகம் நடத்தி வரும் பெட்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுதும் பல விமானங்கள், ஆயிரத்து 900 அலுவலகங்கள் , 6 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்நிறுவனம். இதன் நிறுவனர் பெரட்ரிக் ஸ்மித் ஆவார். இவரே சிஇஓ.,வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சிஇஓ பதவியில் இருந்து வரும் ஜூன் 1ல் பதவி விலக உள்ளார். இந்த பதவியில் ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.