ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை: அ.தி.மு.க.,வினர் புகார்!!

கோவை: வெள்ளலூர் பேரூராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என, கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.

கோவை, வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று முன்தினம் தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க.,– அ.தி.மு.க., இடையே மோதல் ஏற்பட்டு, போலீசார் தடியடி நடத்தினர். பின், அ.தி.மு.க.,வை சேர்ந்த மருதாசலம் தலைவராகவும், கணேஷ் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.