சென்னை ஐகோர்ட்; கூடுதல் நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13 ஆனது. இரண்டு ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு இருவரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.