பழநி கோவில் காணிக்கை ரூ.2.56 கோடி!!!

பழநி : பழநி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.56 கோடி கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோவிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. காணிக்கையாக தங்கம் 808 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 23 கிராம் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 910 ரொக்கம் மற்றும் 128 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இப்பணியில் இணைஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை துணை ஆணையர் பொன் சுவாமிநாதம், அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.