சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ்!

சிதம்பரம் : கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் பிரச்னை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக, அரசின் முடிவு வரும் வரையில், சிதம்பரத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல், ஆலோசனை நடத்துதல் ஒரு மாதத்திற்கு தடை செய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நி்ர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில். இதற்கான உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.