மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை தரம் உயர்த்த கோரிக்கை – எ.வ.வேலு பேட்டி..

மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். திருச்சியில் இருந்து துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பல நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.