இரட்டை கரு முட்டைகள் விற்பனை: அசைவப்பிரியர்கள் ஆர்வம்!!!

 உடுமலையில், இரட்டை கரு முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை வாங்க அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபகாலமாக, விற்பனையாளர்கள் சிலர், இரட்டைக்கரு முட்டைகள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவை, சாதாரண முட்டையை விட, அளவில் சற்று பெரிதாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இரட்டைக் கரு முட்டைகளை கேட்டு வாங்குகின்றனர். ஓட்டல்களிலும், இதுபோன்ற முட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள் இந்த முட்டைகளை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேநேரம், குழந்தைகள் உட்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.