பாரக் ஒபாமா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும்கூட நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.