Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.
திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாலையில் தற்போது பெய்து வரும் மழையால் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன் கோட்டகம், ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி
