இந்தியாவில் 100க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா உயிரிழப்பு..

இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5,476 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,362 ஆக குறைந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது. 

இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாகும்.தொடர்ச்சியாக 29வது  நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் மே 16, 2020ம் தேதிக்கு பின், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 9 ஆயிரத்து 620 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. 


கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 158 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 66 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.  

நாட்டில் மொத்தம் இதுவரை 1,78,90,61,887 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில்  4 லட்சத்து 80 ஆயிரத்து 144 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம்  வெளியிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.