சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். மூன்று மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் யார் என்பதை தி.மு.க., தலைமை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது; 4ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
