உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒன்றிய செயலர் நியமனம்!!!

நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா, ெடல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம், அனூப் குமார் பெயரை பரிந்துரை செய்திருந்தது. அனுப் சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டபோது, அவர் டெல்லியில் நீதித்துறை அதிகாரியாக  இருந்தார். இந்நிலையில், நீதித்துறை அதிகாரியான இவர் பதவி மூப்பு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.