6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா!!!

ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.