ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 6 வயது சிறுவன் பலி!!!

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆள்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 4 நாள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.