பெர்சவரனஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கி ஓராண்டு நிறைவு- நாசா கொண்டாட்டம்!!!

 பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.  கடந்த 2020-ம் ஆண்டு  ஜூலை 30-ம் தேதி நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. நாசா அனுப்பிய இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், விண்கலத்தில் இருந்து பெர்சவரன்ஸ் ரோவர், கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது. இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் பல தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பியது.  பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை நாசா விஞ்ஞானிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.