அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!!!!!

அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியான காரியென்டெஸில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதுவரை 5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பசுமைப் பகுதிகள் தீக்கிரையாகி இருக்கும் நிலையில், தீயணைப்புப் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீ அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.