ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி:ரஹானே, புஜாரா களம் இறங்குகிறார்கள்…..

‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி 1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்த சீசனில் ரஞ்சி ஆட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி 87-வது ரஞ்சி கிரிக்கெட் ெதாடர் இந்தியாவில் 9 நகரங்களில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அவை இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக லீக் சுற்று இன்று முதல் மார்ச் 15-ந்தேதி வரையும், அடுத்தகட்டமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஐ.பி.எல். முடிந்த பிறகு மே 30-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 2019-20-ம் ஆண்டில் 169 ஆட்டங்கள் நடந்தன. ஆனால் இந்த சீசனில் மொத்தம் 65 ஆட்டங்களில் சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும்.இதில் பங்கேற்கும் 38 அணிகளில் 8 ‘எலைட்’ பிரிவில் தலா 4 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘எலைட்’ பிரிவில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘பிளேட்’ பிரிவில் ஒவ்ெவாரு அணியும் தங்கள் பிரிவில் 3 அணிகளை மட்டுமே சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ‘எலைட்’ பிரிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இடங்களை பிடிக்கும் 8 அணிகளில் சிறந்த 7 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும்.எஞ்சிய ஒரு அணி, ‘பிளேட்’ குரூப்பில் முதலிடத்தை பெறும் அணியுடன் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும்.இது கொரோனா காலக்கட்டம் என்பதால் போட்டி நடக்கும் சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி உள்பட 9 நகரங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்கப்பட்டு அதில் இணைந்த வீரர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டு முறை கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதன் பிறகே பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 மாற்று வீரர்களை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.