நரசங்குப்பம் பகுதியில் வடமாநிலத்தை சார்ந்த நபர் உடல் பாதி எரிப்பு!!!

கல்பாக்கத்தை அடுத்த நரசங்குப்பம் பகுதியில் வடமாநிலத்தை சார்ந்த நபர் உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் வடமாநில இளைஞர் தலை கை மற்றும் கால்களில் அடிப்பட்டு உடல் எரிக்கப்பட்டு பிணமாக கிடந்த நிலையில் பொதுமக்கள் சதுரங்கபட்டினம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றினர் உடலில் ரத்தம் கசிந்த நிலையில் எரிக்கப்பட்ட இருந்த காரணத்தினால் கொலையா அல்லது தற்கொலையா என சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.

Leave a Reply

Your email address will not be published.