மன்னார் கடலில் எண்ணெய் தேடும் பணிக்கு இந்தியா விருப்பம்

இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையை சூழ முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஆய்வு நடவடிக்கைகளிலும், இலங்கை கடற்பரப்பில் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா, காவிரி வளைகுடா மற்றும் இலங்கை வளைகுடா என மூன்றாக பிரித்துள்ளதுடன், இந்த அனைத்து வளைகுடாக்களிலும் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.

Leave a Reply

Your email address will not be published.