கொரோனா சான்றிதழை வாட்ஸ்அப்பில்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது பிற மாநிலங்களுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. சமீபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்ட சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இப்போது சில நோடிகளில் வாட்ஸ் அப் மூலம் உங்கள் போனிலேயே பெற்றுக்கொள்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழி செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை எவ்வாறு எளிதாக பெறலாம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது அதற்கான எளிய வழிமுறையை மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

* கோவிட் தொடர்பான சான்றிதழ்களை பெற மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு மை கவர்ன்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க் என்ற MyGov Corona Helpdesk வாட்ஸ்அப் சாட்போட்டை பயன்படுத்தலாம்.

* MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் +91 9013151515-ஐ உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.