நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை.

நடிகர் விஜய் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தனி நீதிபதியின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற அமர்வு தீர்ப்பு தரும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் தீர்ப்பை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று மனு விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில், தான் நுழைவு வரி கட்டுவதாக நடிகர் விஜய் உறுதியளித்துள்ளார். மேலும், தனி நீதிபதி விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் மீதான விமர்சனங்களை நீக்குவது தொடர்பான விசாரணை நான்கு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.