சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலமன் பாப்பையா சந்தித்தார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக சாலமன் பாப்பையா !

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்புக்கு இசையமைப்பாளர் தேவாவை முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுத்தார்.

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்பு உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு புதியவர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி, இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்புக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவை தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 22-ம் தேதி, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலமன் பாப்பையா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:
S.MD.ரவூப்

Leave a Reply

Your email address will not be published.