சர்ச்சை பேச்சால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்…

பாஜக தலைவர்களை விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது பலர் தொடர்ந்து புகாரளித்த நிலையில், இது தொடர்பாக சட்ட விரோதமாக கூடுதல், ஜாதி, மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கை குறித்து  அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.