சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளதால், மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஒரு நிம்மதி அளிக்கும் விஷயமாக பெட்ரோல், 8 வது நாளாக விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
