திருச்சிக்கு 12 லட்சத்தில் குடிநீர்த் தொட்டி..

ரூபாய் 12 லட்சம் மதிப்பில் திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்தார் அமைச்சர் கே என் நேரு.திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52ஆவது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020-2021ஆம் ஆண்டு நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு, புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.