அமித் ஷா வருகிறார் -கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்ததை ஒட்டி அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் இருந்து, அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடி வைக்க வேண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கி அமித் ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக அவரது சொந்த மாநிலமாக குஜராத் சென்றுள்ளார். அவர் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி அகமதாபாத்தில் உள்ள வெஜல்பூர் காவல் நிலையத்தில் இருந்து , அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குடியிருப்போர் சங்கங்களின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில் ஞாயிறு (11/07/2021) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.