டெல்லியில் இன்று 135 பேருக்கு கொரோனா; 201 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லியில் தற்போது 2,372 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,32,168 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,907 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று ஒரே நாளில் 201 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,04,889 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 2,372 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் ?மலர் மின்னிதழ் செய்தியாளர் தமீம் அன்சாரி

Leave a Reply

Your email address will not be published.