இரயில்பெட்டி இணைப்புத்
தொழிற்சாலை (Integral Coach Factory)
அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கானப்
பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு
சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட
இந்திய இரயில்வேயின் முதன்மை
தொழிற்சாலையாகும். சென்னையின்
புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய
விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட
இந்தத் தொழிற்சாலையில் இலகுரக,
முழுமையும் எஃகினாலும் முழுமையும்
காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானதுமான
பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே பயணிகளின் ரயில்
பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான
உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத்
தொழிற்சாலை உள்ளது.
இப்பகுதியில் நேற்று இரவு 9:15 மணியளவில் வெள்ளை நிற காரில் 3 பேர்கள் அதிவேகமாக சென்ற போது கார் ஆனது நிலை குலைந்து போனது. அப்போது விபத்து ஏற்பட்டது. இருப்பினும் அதிர்ஷ்வசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் காந்திநகர் காலனியில் அமைந்துள்ள K-7 காவல் நிலையத்திற்கு சம்பவத்தை பற்றி தெரிந்ததும் விபத்து குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றதை காணலாம்.
-செய்தியாளர்
ரசூல் மொய்தீன்.
