மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

ப. சிதம்பரம் கலந்து கொண்டார்

சிவகங்கை ஜூன் 11

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மோடி அரசை கண்டித்து முன்னாள் உள்துறை அமைச்சர் மாண்புமிகு. ப.சிதம்பரம் எம் பி அவர்கள் தலைமையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி அவர்கள் முன்னிலையில் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசின் மக்கள் விரோத போக்குகளை விமர்சித்துப் பேசினார்.

பெட்ரோல் டீசல் விலையையும் சமையல் எரிவாயு விலையையும் குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பாரதிய ஜனதா அரசு எதையுமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது என்றார்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் கந்தசாமி

Leave a Reply

Your email address will not be published.