திருப்பூரில் இளம் தளிர் அமைப்பின் சார்பில் கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் இளம் தளிர் அமைப்பின்
சார்பில் இன்று திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட 50 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறி மளிகை பொருட்கள் திருமதி. ஜெயக்குமார் ராஜலட்சுமி தலைமையில் வழங்கப்பட்டது. மற்றும் 3வது வார்டு உறுப்பினர் திருமதி. உஷா சண்முக சுந்தரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிருபர்கள் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. தனபால் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்கள். செய்தியாளர். T.சங்கர்

Leave a Reply

Your email address will not be published.